என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
- கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
- 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்