search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயம்
    X

    சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயம்

    • சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39) விவசாயி. அவரது மகள் பொன்னி (வயது14) இவர் புக்கிரவாரி யில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். அதிகாலை 3:30 மணி அளவில் அவருடைய தந்தை அய்யப்பன் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதனால். அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார். இதனால் சந்தேகம் அடைந்த அய்யப்பன் கீழ்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பொன்னி என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×