search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு
    X

    மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர்.
    • இந்த நிலையில் நேற்று 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 26 பேர், ஓமலூரில் 4 பேர், கெங்கவல்லியில் 3 பேர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மகுடஞ் சாவடி, ஆத்தூர், மேட்டூர், பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நங்கவள்ளி, வீர பாண்டி, காடையாம்பட்டி, எடப்பாடி, பன மரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 3 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரி களில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 77 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 479 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×