என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரிவாள், கத்தியுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
- போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மேம்பாலம் ரெயில்வே குட்ஷெட் சாலையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி திரிவதாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் 6 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 26), மணிகண்டன், சீனிவாசன், மணிகண்டன் உள்பட 6 பேர் என்பதும், தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், மணிகண்டன், சீனிவாசன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்