search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பகுதியில் ரூ.9.39 லட்சத்தில் 500 கிலோ வாட் திறனுடைய மின்மாற்றி
    X

    நெல்லை சந்திப்பு பகுதியில் ரூ.9.39 லட்சத்தில் 500 கிலோ வாட் திறனுடைய மின்மாற்றி

    • ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றியால் மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகம் வழங்கப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி, நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி வழிகாட்டலில், ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில் வருங்கால மின் நுகர்வோர் மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது. ரூ.9 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் சன்னதி தெரு, கணேசபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகமும், புதிய மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு வழங்கினாலும் குறைந்த மின்னழுத்த குறைபாடு முற்றிலும் தவிர்க்கப்படும்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர் உமா மகேஸ்வரி, ஆக்க முகவர்கள் அசோகன், சஷ்டிகுமார் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×