search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
    X

    கோவை அருகே மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

    • கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுசிதரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சஞ்சனா (வயது 5).

    இவர் கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சஞ்சனாவை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது சிறுமியில் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிக காய்ச்சல் காரணமாக அவர் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சஞ்சனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×