search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருகே  மரத்தில் கார் மோதி  5 பேர் படுகாயம்
    X

    படுகாயம் அடைந்தவர்களை படத்தில் காணலாம்.

    குற்றாலம் அருகே மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்

    • தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.
    • இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.

    மரத்தில் கார் மோதியது

    அவர்கள் அனைவரும் அங்கு குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த னர். இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் செய்யது ஜலால், முகம்மது ஹாஜி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இதனால் அவர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×