என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே சோகம் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
    X

    சாலை விபத்து

    கடலூர் அருகே சோகம் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

    • வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளும், லாரிகளும் மோதியது.
    • இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லாரிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×