என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்து
கடலூர் அருகே சோகம் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
- வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளும், லாரிகளும் மோதியது.
- இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர்:
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லாரிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






