search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்து - மதுரவாயலில் பரபரப்பு
    X

    தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்து - மதுரவாயலில் பரபரப்பு

    • மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்தில் சிக்கியது.

    நின்று கொண்டிருந்த லாரி மீது கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து மோதியது. அதன்பின், ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதியது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×