search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பஸ்நிலையத்தில் நடந்த   பெயிண்டர் கொலையில்   4 பேர் சிக்கினர்- போலீசார் விசாரணை
    X

    தூத்துக்குடி பஸ்நிலையத்தில் நடந்த பெயிண்டர் கொலையில் 4 பேர் சிக்கினர்- போலீசார் விசாரணை

    • பஸ் நிலைய வளாகத்தில் வைத்து சரவணக்குமாரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது.
    • சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரைண்ட்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது28). பெயிண்டர்.

    கொலை

    நேற்று இரவு இவர் தனது உறவினரை வழியனுப்புவதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது பஸ் நிலைய வளாகத்தில் வைத்து அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது. பஸ் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    எஸ்.பி.விசாரணை

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை தொடர்பாக வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபிசுஷின்ஜோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 பேரை பிடித்து விசாரணை

    சரவணக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது. இவர் தாளமுத்துநகரில் வசித்து வந்துள்ளார். அப்போது சரவணக்குமாருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பிரைண்ட்நகருக்கு வந்துள்ளார்.

    இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் வந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×