என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 4 பேர் கைது
- தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபுக்கு தகவல் கிடைத்தது.
- சிவக்குமாரிடம் இருந்து 87 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடு படக்கூடிய நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை யில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ பிரபுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(வயது 52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 87 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி வடபகம் போலீஸ் சரக பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்