search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள்  பதுக்கி விற்ற 4 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 4 பேர் கைது

    • தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபுக்கு தகவல் கிடைத்தது.
    • சிவக்குமாரிடம் இருந்து 87 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடு படக்கூடிய நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை யில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ பிரபுக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(வயது 52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 87 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி வடபகம் போலீஸ் சரக பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×