search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது
    X

    ஏற்காட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமையிலான போலீசார் ஏற்காடு மலை கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில், கீரைக்காடு பகுதியில் மலர் கொடி என்பவரும், ஒண்டிக்கடை பகுதியில் சசிகலா என்பவரும், அரங்கம் கிராமத்தில் ராணி என்பவரும், பட்டிபாடி கிராமத்தில் சின்னம்மா என்ப வரும் அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×