search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது
    X

    பூட்டிய வீட்டில் ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது

    • மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார்.
    • அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி மனக்காடு குள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார். அங்கு குடியிருந்த வீட்டை காலி செய்யும் போது, பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என கருதி பாதி பொருட்களை அந்த வீட்டிலேயே வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீதி பொருட்களை எடுக்க வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணிக்கம் வீராணம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணக்கம் வீட்டில் கொள்ளையடித்தது மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சதீஸ்குமார் (27), சுரேஷ் (21), பரமசிவம் (27), கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×