search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய் கடித்ததில் 3 பேர் படுகாயம்
    X

    சிகிச்சை பெற்று வருபவர்கள்.

    நாய் கடித்ததில் 3 பேர் படுகாயம்

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி கிராமங்களில் நாய்கள் அதிகமாய் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நெய்வேலி கடை வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 24), மருதேஷ், நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரன், ஆகிய மூவரையும் சுற்றி திரிந்த வெறிநாய் கடித்தது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×