search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீச்சு- கோவையில் மேலும் 3 பேர் கைது
    X

    பெட்ரோல் குண்டு வீச்சு- கோவையில் மேலும் 3 பேர் கைது

    • பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • வெரைட்டிஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை

    கோவை மாநகரில் கடந்த 22-ந் தேதி இரவு வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க.அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, 100 அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    மறுநாள் குனியமுத்தூர், பொள்ளாச்சி பகுதியில் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. குனியமுத்தூர் மற்றும் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

    குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நேற்று முன்தினம் பா.ஜ.க. அலுவல கத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் குனிய முத்தூரில் இந்து அமைப்பை சேர்ந்த வர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி யதாக இன்று ஒருவரை போலீ சார் கைது செய் தனர். மேலும் குனிய முத்தூர் வெரை ட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண் ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசார ணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×