என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரத்தில் 3 குழந்தைகளின் தாய்  தூக்கு போட்டு தற்கொலை
    X

    வி.கே.புரத்தில் 3 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை

    • ரவி-ஜெப ஜெசிந்தாவுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
    • வீட்டில் இருந்த ஜெப ஜெசிந்தா திடீரென அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் வடக்கு அகஸ்தி யர்பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெப ஜெசிந்தா (வயது 33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஜெப ஜெசிந்தா திடீரென அறைக்குள் சென்று சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜெப ஜெசிந்தா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து வி.கே.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் ஜெப ஜெசிந்தா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×