நாகை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 25 வாகனங்கள் பறிமுதல்

நாகை நாகூர் ரோட்டில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.இதில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுடன் போலீசார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுடன் போலீசார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ ஆணைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாகை மாவட்டத்தில் எல்லைக்கு உட்பட்ட நாகை நாகூர் ரோட்டில் இருசக்கர வாகனங்களின் சிறப்பு தணிக்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பிரபு மற்றும் நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் நாகை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஜார்ஜ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

தணிக்கையின் போது கல்லூரியின் பயிலும் மாணவர்கள் தலைக்கவசம் இல்லாமல் செல்போன் பேசிக் கொண்டும் வாக னத்தின் ஆவணங்கள் இன்றியும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இயக்கப்பட இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குற்றங்களின் அடிப்படையில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சோதனை நடத்தப்படும் எனவும் என்பதை வட்டார போக்கு–வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com