என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் 27-ந் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை
- விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன.
- ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த மாத இறுதி முதல் மீண்டும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் விமானங்கள் இயக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன.
இதனால் வருகிற 27-ந் தேதி முதல் 24 மணி நேரமும் விமானங்களை இயக்க மத்திய சிவில் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல்(டிஜிசிஏ) அனுமதி வழங்கி உள்ளார்.
27-ந் தேதி முதல் ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் வழக்கம் போல அதிகாலை 4.30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, மீண்டும் 5.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல சிங்கப்பூ–ருக்கு இயக்கப்படும் விமான–மும் 27-ந் தேதி முதல் இரவு 9.30 மணியளவில் தரை இறக்கப்பட்டு, மீண்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்