search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த படித்துரை
    X
    உயிரிழந்த படித்துரை

    ஆட்டோ மரத்தில் மோதி மெக்கானிக் சாவு

    திருமங்கலம் அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
    திருமங்கலம் 

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் படித்துரை(44). இவருடைய மனைவி தேடா செல்வி. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    படித்துரை அனுப்பபட்டியில் டிங்கரிங் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு டிங்கரிங் பணிக்கு வந்த ஆட்டோவை எடுத்து கொண்டு செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் சென்றார்.

    அனுப்பப்பட்டி அருகே வரும்போது பிரேக் பிடிக்காததால் சாலையோர புளியமரத்தில் ஆட்டோ மோதியது.

    இதில் படுகாயமடைந்த படித்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×