என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பைக் மீது லாரி மோதி கப்பல் என்ஜினீயர் பலி

    திருப்பத்தூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கப்பல் என்ஜினீயர் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாத்தாங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்   மகன் பாரத் (23). இவர் கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் என்ஜீனி யராக பணிபுரிந்தார். 

    விடுமுறையை அடுத்து இவர் சொந்த ஊரான காட்டாத்தங்குடிக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். இன்று கோவி லுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு  பைக்கில் திருப்பத்தூர் வந்தார்.   

    திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலை தங்கமணி தியேட்டர் அருகில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பாரத்,  ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு   சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    Next Story
    ×