search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    வடபழனியில் காவலாளியிடம் செல்போன் பறிப்பு

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில் உள்ள நகை கடை ஒன்றில் காவலாளியாக இருந்தவரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில் உள்ள நகை கடை ஒன்றில் காவலாளியாக இருப்பவர் சேகர்.

    65 வயதான இவர் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சேகரிடம் நேரம் கேட்டுள்ளார். 

    பின்னர் திடீரென அவரது கையில் இருந்த செல்போனை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×