search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்புத்திட்ட  சான்றிதழை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கிய காட்சி.
    X
    பராமரிப்புத்திட்ட சான்றிதழை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கிய காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு திட்டம்

    தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தென்காசி:

     கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 6 குழந்தைகளுக்கு பிரதரின் பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 வருடத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை,

    பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ. 10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.

       நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மா வட்ட குழந்தை பாது காப்பு அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×