search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு யானை
    X
    காட்டு யானை

    பண்ணாரி சோதனை சாவடியை முகாமிட்ட காட்டு யானை- ஊழியர்கள் அச்சம்

    காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

    இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் பணியாளர்கள் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதிகாலை பண்ணாரி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் உலாவி கொண்டு இருந்தது. சோதனைச்சாவடியின் முன்பு சாலை நடுவே காட்டு யானை நீண்ட நேரம் நின்றது.

    இதனால் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டனர். சுமார் 30 நிமிடம் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் சோதனை சாவடி பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி க்குள் மீண்டும் சென்றது. இதனால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×