search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல்

    நெல்லை பழையபேட்டையில் சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டை புதுகிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது 40). இவர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் கடை வைத்துள்ளார்.

    நேற்று அவரது கடைக்கு பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்குமார்(27) என்பவர் வந்தார். மதுபோதையில் கடைக்கு வந்த அவர் சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஆனால் ராஜரத்தினம், தனது கடையில் சிகரெட் இல்லை என்று கூறி உள்ளார். அதனை கேட்காத நரேஷ்குமார், கடையில் அமர்ந்திருந்த ராஜரத்தினத்தை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்த பேனாவை எடுத்து ராஜரத்தினம் மீது குத்தி உள்ளார்.

    உடனே பஜார் பகுதியில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து நரேஷ்குமாரை தள்ளிவிட்டனர். இதுதொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×