search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்குப்பதிவு
    X
    வழக்குப்பதிவு

    பெண்ணை தாக்க முயற்சி 15 பேர் மீது வழக்குப்பதிவு

    பெண்ணை தாக்க முயற்சி செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது32), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் குறிப்பிட்ட தெரு வழியாக வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று அந்த தெரு வழியாக சென்றபோது சுமித்ராவை வழிமறித்த அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ஜெயகுமார், பசுபதி, முத்துலட்சுமி, ராமலட்சுமி மற்றும் 10 பேர் இந்த வழியாக வரக்கூடாது என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமித்ராவை அவர்கள் தாக்க முயன்றனர்.

    இது தொடர்பாக சுமித்ரா ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×