search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்தது

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்தது. 2-வது அணு உலையில் உற்பத்தி இன்று தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு மின் நிலையத்தில் ஒன்று மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டுவருகிறது. 

    இவற்றின் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட்டு க்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3-வது மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    இது தவிர 5 மற்றும் 6-வது அணுஉலைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.

     அந்த பணி இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    Next Story
    ×