என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்.
பணகுடி அருகே கார் மோதி காற்றாலை ஊழியர் பலி
By
மாலை மலர்30 May 2022 3:53 PM IST (Updated: 30 May 2022 3:53 PM IST)

பணகுடி அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் காற்றாலை ஊழியர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள மாடநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 27). ஐ.டி. படித்து முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை குமாரபுரம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜேஷ் கண்ணனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பணகுடியை சேர்ந்த சதீஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X