என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்29 May 2022 8:23 AM GMT (Updated: 29 May 2022 8:23 AM GMT)
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கங்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72) .இவரது மகள் மணிமேகலை( 46) . இவர் குடும்பத்தினருடன் தனது தந்தை வீட்டில் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.
மணிமேகலைக்கு திருமணமாகி ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர் .ராமசாமி ஒரு வாரத்திற்கு முன் சாலை விபத்து ஏற்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டார் .இந்நிலையில் இவருக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்தது. அது சரியாகததால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்த போது திடீரென மாயமனார்.
மணிமேகலை மற்றும் குடும்பத்தினர் அவரை தேடிப் பார்த்தபோது அங்கிருந்த கார் ஷெட்டில் இரும்பு கம்பியில் கயிற்றை கட்டி ராமசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினரை அழைத்து ராமசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு
பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிமேகலை மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X