search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகிரி அருகே கஞ்சா விற்ற தொழிலாளி கைது

    சிவகிரி அருகே கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் தென்மலை, அருகன்குளம் வண்ணான்பாறைபுதூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகிரி தாலுகா தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 64) என்பவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.

    அவரைப் பிடித்து சோதனையிட்டதில் அவரிடமிருந்து ரூபாய் 2000 மதிப்பிலான 50 கிராம் வீதம் 10 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் கைது செய்து சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×