என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கட்சி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்- பிரேமலதா விஜயகாந்த்
Byமாலை மலர்28 May 2022 8:16 AM GMT (Updated: 28 May 2022 8:16 AM GMT)
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் விவசாயம் மற்றும் நெசவாளர்கள் தான். இதன் மூலம் தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 6 மாவட்டங்களில் அனைத்து நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை, பருத்தி விலை உயர்வு காரணமாக இது சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலைகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஆட்சியில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால் இதை மாநில அரசு சரி செய்ய முடியும் என்கிறார்கள்.
இப்படியே மக்கள் பிரச்சினைகளை மாறி மாறி பழி சுமத்தி தப்பிக்க வழியை தான் பார்க்கிறார்கள். பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று உலகத்தில் இந்தியா ஜவுளித்துறையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 19.4 சதவீதம் ஏற்றுமதியில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை, திருப்பூரை ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரி உள்ளது.
ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பவராக இருக்க வேண்டும். பருத்தி நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆலைகளை திறக்க வேண்டும். அதை நம்பி வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
அம்மா உணவகம் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். அந்தத் திட்டத்தை தொடர வேண்டும். இன்று கலைஞருக்கு சிலை திறப்பு விழா வைத்திருக்கிறார்கள் இதை வரவேற்கிறோம். எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற காரணத்தில் நிறைய இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியது. இதன் காரணமாக தான் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் மாட்டி திணறி வருகிறது.
விஜயகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்தபோது லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்றார். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது. அந்த லஞ்சம் ஊழலை ஒழிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்று எல்லா தலைவர்களும் பேசி வருகிறார்கள்.
ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று முதலில் கூறியவர் விஜயகாந்த் தான். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று எல்லாம் மாநிலங்களில் எடுத்துக்கொண்டாலும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் பற்றி நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம். ஜூன் 2-ந்தேதி தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அடுத்தது உட்கட்சி தேர்தல். செயற்குழு பொதுக்குழு வைத்துள்ளோம். இவ்வாறு எங்கள் கட்சி வளர்ச்சி நோக்கியே நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் சமயம் எங்கள் கட்சி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் இன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் விவசாயம் மற்றும் நெசவாளர்கள் தான். இதன் மூலம் தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 6 மாவட்டங்களில் அனைத்து நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை, பருத்தி விலை உயர்வு காரணமாக இது சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலைகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஆட்சியில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால் இதை மாநில அரசு சரி செய்ய முடியும் என்கிறார்கள்.
இப்படியே மக்கள் பிரச்சினைகளை மாறி மாறி பழி சுமத்தி தப்பிக்க வழியை தான் பார்க்கிறார்கள். பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று உலகத்தில் இந்தியா ஜவுளித்துறையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 19.4 சதவீதம் ஏற்றுமதியில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை, திருப்பூரை ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரி உள்ளது.
ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பவராக இருக்க வேண்டும். பருத்தி நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆலைகளை திறக்க வேண்டும். அதை நம்பி வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
அம்மா உணவகம் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். அந்தத் திட்டத்தை தொடர வேண்டும். இன்று கலைஞருக்கு சிலை திறப்பு விழா வைத்திருக்கிறார்கள் இதை வரவேற்கிறோம். எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற காரணத்தில் நிறைய இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியது. இதன் காரணமாக தான் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் மாட்டி திணறி வருகிறது.
விஜயகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்தபோது லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்றார். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது. அந்த லஞ்சம் ஊழலை ஒழிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்று எல்லா தலைவர்களும் பேசி வருகிறார்கள்.
ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று முதலில் கூறியவர் விஜயகாந்த் தான். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று எல்லாம் மாநிலங்களில் எடுத்துக்கொண்டாலும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் பற்றி நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம். ஜூன் 2-ந்தேதி தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அடுத்தது உட்கட்சி தேர்தல். செயற்குழு பொதுக்குழு வைத்துள்ளோம். இவ்வாறு எங்கள் கட்சி வளர்ச்சி நோக்கியே நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் சமயம் எங்கள் கட்சி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X