என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகை-பணம் திருட்டு, 2 பேர் கைது
Byமாலை மலர்28 May 2022 6:08 AM GMT (Updated: 28 May 2022 6:08 AM GMT)
ராணுவவீரர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரைசேர்ந்தவர் ராமு(வயது35).இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சுந்தரலேகா(29). இவர் கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தையல் வகுப்பிற்கு சென்றுவிட்டார்.
அவர் மாலையில் வந்து பார்த்தபோது பூட்டிய வீட்டின் கதவு திறந்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன்நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளைய
டிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக சுந்தரலேகா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த
பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சுந்தரலேகா வீட்டிற்கு ராமுவின் அண்ணன் ராஜசேகர் மனைவி விஜயகுமாரி(எ)பேச்சிம்மாள், இவரது தோழி நாகதுர்கா இருவரும் வந்து சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமாரி, நாகதுர்க்காவிடம் விசாரணை நடத்திய போது இருவரும் சோ்ந்து ராமு வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நகை பணத்தை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X