search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பால் சொசைட்டி நடத்தியதில் நஷ்டம்-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    பால் சொசைட்டி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36).இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (வயது 25) என்ற மனைவி உள்ளார்.

    சக்திவேல் அந்த பகுதியில் பால் சொசைட்டி வைத்து நடத்தி வந்தார். கடந்த 3 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சக்திவேல்  நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார் .

    இதை கண்ட உறவினர்கள் சக்திவேலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×