search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாம்பவர்வடகரையில் ஓடையில் மணல் திருடியவர் கைது

    சாம்பவர்வடகரை அருகே ஓடையில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

    மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×