search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கணபதியில் பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    சரவணம்பட்டி:

    கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையம் ராமன் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சாவித்ரி (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு  வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். 

    அப்போது சாவித்ரியை மோட்டார் சைக்கிளில்  2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் சாவித்ரி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×