என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம் தொடங்குகிறது
Byமாலை மலர்25 May 2022 9:47 AM GMT (Updated: 25 May 2022 9:47 AM GMT)
தேர் திருவிழாவுக்கு முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கோவில்களிலும் நாளை கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (26-ந் தேதி) தொடங்கி 27 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் தொடங்குவதால் தேரில் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராக உள்ளது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறு கிறது.
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கோவில்களிலும் நாளை கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பெண்கள் கிராமங்களில் மடிப்பிச்சை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்தி க்கடன் செலுத்தினார்கள். மேலும் செஞ்சேரி மலையைச் சேர்ந்த ஆண் பக்தர் 30 அடி நீள அலகு குத்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி னார்.
இதேபோல மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிேஷக பூஜையில் 18 கிராம பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த சூலக்கல் மாரியம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்த ர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X