search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விண்ணப்பம்
    X
    விண்ணப்பம்

    ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டு பிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறிவியல் நகரம் 2018-19ம் ஆண்டு முதல் தமிழக அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது” வழங்கி வருகிறது.

    இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் 2 சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டு பிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் அறிவியல் கண்டு பிடிப்பினை உறுதி செய்யும் ஆவணங்கள் ஆகியவை அறிவியல் நகரத்திற்கு 10.06.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×