search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
    X
    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர்கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கலைச்செல்வி (வயது25) இவருக்கு இன்று காலை திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர் அங்கு விரைந்து சென்று காடாம்புலியூர் 108 ஆம்புலன்ஸில் அவர்களை அழைத்து வரும் போது பிரசவ வலி அதிகமானதால் காடாம்புலியூரில் ஆம்புலன்சிலேயே காலை 10.21 மணிக்கு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. 

    அப்போது ஆம்புலன்ஸ்ல் அவசர கால மருத்துவ நுட்புநர் ஜெரோம் ராஜா மற்றும் சந்திரசேகரன், ஓட்டுனர் செல்வகுமார் மேலும் உடனே தாயும், சேயும் நலமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    Next Story
    ×