search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடைகாலத்தில் பாலாற்றில் வெள்ளம் வந்த காட்சி
    X
    கோடைகாலத்தில் பாலாற்றில் வெள்ளம் வந்த காட்சி

    காஞ்சிபுரம் கோடைகாலத்தில் பாலாற்றில் வெள்ளம்- பொதுமக்கள் உல்லாச குளியல்

    பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடையில் பாலாற்றில் வெள்ளம் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாடகளாக தொடர்ந்து கோடை மழை கொட்டி தீர்த்தது.

    ஆந்திரா பகுதியில் பெய்த கனமழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை முழுவதும் நிரம்பியது.

    அங்கிருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது இதேபோல் பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்தும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.

    இந்த உபரிநீரானது வானியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பாலாற்றில் பாய்ந்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு வந்துள்ளது.

    பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடையில் பாலாற்றில் வெள்ளம் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் வெள்ள நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமாக ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கோடை காலத்திலும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வெள்ள பெருக்கு காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×