search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மனைவியை கொல்ல வாயில் விஷம் ஊற்றிய கணவர் கைது

    வேதாரண்யம் அருகே மனைவியை கொல்ல வாயில் விஷம் ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா சிறுதலைக்காடு, மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார்(45). இவரது மனைவி தனபாக்கியம் (35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகளும் , ஒரு மகனும் உள்ளனர்.
     
    இந்நிலையில் குமார் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியின் கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்து எடுத்து தண்ணீருடன் கலந்து வாயில் ஊற்றி உள்ளார்.

    இதனையடுத்து தனபாக்கியம் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தன பாக்கியத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் 

    இதுகுறித்து புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×