search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி சிவா
    X
    திருச்சி சிவா

    தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முதலிடம்- திருச்சி சிவா எம்.பி. பேச்சு

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் 505. நீங்கள் தந்த காலம் 5 ஆண்டுகாலம். ஆனால் ஓராண்டிற்குள் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய சரித்திர ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர் நகர் பகுதியில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்று பேசினார். அவர் அவர் கூறியதாவது:

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் 505. நீங்கள் தந்த காலம் 5 ஆண்டுகாலம். ஆனால் ஓராண்டிற்குள் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய சரித்திர ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

    அ.தி.மு.க. ஆட்சியில் யார் வேண்டுமானாலும் பணியில் சேரலாம் என்று கூறியதால் மின்சார வாரியத்தில் பல்வேறு துறைகளில் அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதியிலிருந்து பலர் பணியில் சேர்ந்தனர்.இதனால் தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

    மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் யார் வேண்டுமானாலும் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டு மக்கள்தான் சேர வேண்டும் என மாற்றியதால் தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தின் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது.

    அத்தனையிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் இடம்பெறுவார்கள். ஒன்றிய அரசோடு பேச வேண்டியதை பேசி பெற வேண்டியதை பெறுகிறோம். அதே நேரத்தில் அவர்கள் ஏதாவது எல்லை மீறி நடந்தால் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று பேசுகிற உணர்ச்சி, தெம்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்... பேரறிவாளன் விடுதலை விவகாரம்: காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டில் தவிப்பது ஏன்? ஜி.கே.வாசன் கேள்வி

    Next Story
    ×