search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி விபத்து
    X
    லாரி விபத்து

    திருவள்ளூர் அருகே 23 டன் நோட்டு புத்தகத்துடன் லாரி கவிழ்ந்தது- டிரைவர் உயிர் தப்பினார்

    திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 டன் நோட்டு புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 23 டன் எடை கொண்ட நோட்டு புத்தகங்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி லாரி வந்தது.

    திருவள்ளூர் அருகே உள்ள மேலனூர் மூலக்கரை பகுதியில் இன்று காலை லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்த முயன்றார்.

    அப்போது சாலையோரத்தில் இருந்த மண்ணில் சரிவு ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 டன் நோட்டுப்புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்துதும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

    Next Story
    ×