search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெட்டப்பட்ட கிளையில் கொத்துக் கொத்தாய் காய்த்த மாங்காய்கள் - பொதுமக்கள் வியப்பு

    தற்போது வெட்டப்பட்டுள்ள அந்தக் கிளை பகுதியிலிருந்து கொத்துக்கொத்தாக மாங்காய் காய்த்து தொங்குகிறது.
    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சவுண்டம்மாள். இவர் தனது வீட்டு வளாகத்தில் சிவன் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த கோவில் பகுதியில் 10 ஆண்டுகளான மாமரம் உள்ளது. கோவில் விரிவாக்கத்திற்காக மாமரத்தின் தெற்குப் பகுதி கிளை வெட்டப்பட்டுள்ளது. இந்த கிளையில் இதுவரை காய்கள் காய்க்கவில்லை என்பதால் வெட்டியுள்ளனர் .

    தற்போது வெட்டப்பட்டுள்ள அந்தக் கிளை பகுதியிலிருந்து கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்து தொங்குகிறது. இதை இப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மாங்காய்கள் எப்பொழுதும் கிளையிலிருந்து தான் காய்க்கத் துவங்கும். 

    ஆனால் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து காய்கள் காய்த்து உள்ளது அனைவருக்கும் வியப்பை அளிக்கிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×