search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை

    கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அசானி புயலாக மாறியது.

    இந்நிலையில்  அசானி புயல் நேற்றுமுன்தினம் அமைதியான முறையில் கரையை கடந்தது. மே 3-ந் தேதி தொடங்கிய அக்னி  நட்சத்திர வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான இந்த அசானி புயலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை ஓரிரு நாட்கள் விட்டுவிட்டு  பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மேலும் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்து வந்தது.

    மேலும் இரவில் பலத்த மழை பெய்ததால் எல்லா இடங்களிலும் குளிர் சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி,வேப்பூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு சிதம்பரம், அண்ணாமலைநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.

    தற்போது பெய்த மழையின் அளவு மி.மீ பின்வருமாறு:-

    வேப்பூர் - 75.0, காட்டுமயிலூர் - 70.0, பண்ருட்டி - 32.0, லக்கூர் - 28.0, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 25.0, மீ-மாத்தூர் - 25.0, ஆட்சியர் அலுவலகம் - 20.6,விருத்தாசலம் - 20.0, வானமாதேவி - 17.0 ,குப்பநத்தம் - 15.2, குறிஞ்சிப்பாடி - 12.0, கடலூர் - 11.2, தொழுதூர் - 10.0, கீழச்செருவாய் - 9.0, சேத்தியாதோப்பு - 6.0, கொத்தவாச்சேரி - 5.0, சிதம்பரம் - 2.8, பெல்லாந்துறை - 2.4, அண்ணாமலைநகர் - 2.0, புவனகிரி - 2.0, பரங்கிப்பேட்டை -1.2என மொத்தம் 397.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×