என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்12 May 2022 10:44 AM GMT (Updated: 12 May 2022 10:44 AM GMT)
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்தார்.
மதுரை
மதுரை கீரைத்துறை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கட்டிட தொழி லாளியான இவர் கோவை மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகவல்லி. இவர் சத்துணவு கூடம் ஒன்றில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார்.
மாடசாமி மாதந்தோறும் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார்.
அப்போது மனைவி நாகவல்லி வேலைக்கு லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்கவில்லை என்று தெரிகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாடசாமி நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் அவர் மகனை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதனை மனைவி பஞ்சவர்ணம் தட்டிக் கேட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X