search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    உளுந்தூர்பேட்டை அருகே வட மாநில தொழிலாளி கொன்று புதைப்பு- போலீசார் விசாரணை

    உளுந்தூர்பேட்டை அருகே வட மாநில தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50) விவசாயி. இவர் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீட்டின் வேலைக்காக கடலூரில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர் 3 பேரை அழைத்து வந்தார்.

    தற்போது வீட்டின் வேலை முடிந்த நிலையில் அந்த 3 பேரும் அவர்கள் சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு செல்வதற்கு தயாராகி ஒருவர் சென்றார். மற்ற 2 பேர் நேற்று கிளம்புவதற்கு இருந்தனர்.

    அப்போது ஒருவர் மட்டும் வந்து ஊருக்கு சென்றார். மற்றொரு நபரை காணவில்லை. அதனால் காணாமல் போன நபரை பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் புதிதாக கட்டியுள்ள வீட்டினுள் ஒரு ஓரமாக பூமிக்கடியில் இருந்து ரத்தம் வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தம் வந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு ரத்த வெள்ளத்தில் உடல் ஒன்று இருந்தது.

    பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாயமான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அதை யாரோ கொன்று புதைத்து உள்ளனர். போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×