search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் பொம்மபுரம் ஆதீனம்
    X
    மயிலம் பொம்மபுரம் ஆதீனம்

    ஆன்மீக அரசாக தமிழக அரசு செயல்படுகிறது- மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பேட்டி

    தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் பல திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழாவினை செய்து வைத்துள்ளனர் என்று மயிலம் பொம்மபுரம் ஆதீனம் கூறினார்.
    மயிலம்:

    விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

    மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு உற்சவம் தடை பற்றி பேசப்பட்டு வருகிறது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அந்த பல்லக்கு உற்சவத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து ஆதீனங்கள் சார்பில் தமிழக அரசை அணுகி காலம் காலமாக நடைபெறுகின்ற பல்லக்கு உற்ச்சவத்தை மீண்டும் நடத்துவதற்கு தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து முதல்அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம்,

    இதனையடுத்து இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தார்.

    மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மீண்டும் பல்லக்கு உற்சவத்தை நடத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது பொதுமக்களுக்கும் ஆதீனங்கள் ஆகிய எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது, எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதை எப்படி செய்வது என்பது குறித்து முறையான ஆலோசனைகள் மேற்கொண்டு அந்த பிரச்சினையை சரி செய்கிறார்கள்.

    பொதுவாக உலகத்திலேயே தமிழகத்தில் தான் சமய நிறுவனங்கள், திருக்கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை அதிகம் உள்ளது, மேலும் தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் பல திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழாவினை செய்து வைத்துள்ளனர்.

    மேலும் மேலும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதற்காக ஆதினங்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார், மேலும் கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவது சம்பந்தமாக உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் ஆகியோர் ஒருங்கிணைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு ஆன்மீக அரசாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×