என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

    சிவகாசி அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரஸ்வதி (28) செந்தில்குமார் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் முனியாண்டி ( 35) அதே பகுதி வசித்து வந்தார். அவர் அடிக்கடி செந்தில்குமார் வீட்டுக்கு வந்து செல்வார். 

    அப்போது செந்தில்குமார் மனைவி சரஸ்வதிக்கும், முனியாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. 

    இதனால் மன முடைந்த சரஸ்வதியும் முனியாண்டியும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார் தனது மனைவியும், நண்பரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×