என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுடன் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தேவகோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழமையான நகராட்சி ஆகும். வளர்ந்து வரும் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
நகராட்சியில் 40க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களும், 145 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது நகராட்சி விரிவடைந்து வரும் சூழலில் தூய்மைப் பணியாளர்களின் பணி நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வால்துப்புரவு பணியாளர்கள் தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே ஊதிய உயர்வு வேண்டி நகராட்சி வாசலில் உள்ளிருப்பு போராட்டம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தினார்கள். இதனை அறிந்த நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகராட்சி ஆணையாளர் நகர் காவல்துறை ஆய்வாளர் சரவணன் நகராட்சிக்கு விரைந்து வந்தனர்.
நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் நாம் அனைவரும் சென்று உங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவோம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பணி யாளர்கள் பணிகளுக்கு சென்றனர்.
Next Story






