என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்க முயன்ற வீரர்கள்.
    X
    மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்க முயன்ற வீரர்கள்.

    மஞ்சு விரட்டு போட்டி

    திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா  கல்லல் ஒன்றியம் சிராவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழையப்பட்டி கிராமத்தில்  அழகுள்ள விநாயகர் கோவில் திருக்குட நன்னீ ராட்டு பெருவிழா மற்றும்  100ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.

    இதை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டு போட்டி ஏழுர், பத்து நாடு கிராம நாட்டார்கள் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும், மஞ்சு விரட்டுகளும், நடைபெறவில்லை.

    தடை நீக்கம் காரணமாக இந்த ஆண்டு நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாவ ட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு மஞ்சு விரட்டு தொழு வத்தில் இருந்தும், கட்டுமாடுகளாக வும், கண்மாய் மற்றும் வயல்வெளிகளில்  அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி னர். 

    காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன் தலைமையில் திருப்பத்தூர் மற்றும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×