search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகள்
    X
    மாணவிகள்

    கீழடியில் குவியும் மாணவ-மாணவிகள்

    அகழாய்வு பணியை பார்வையிட கீழடியில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன, தற்போது 8-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது.
    இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த‌ வெளி அருங்காட்சியமாக அறிவித்திருந்தது. பொதுமக்கள் இதை எப்போது வேண்டு மானாலும் பார்த்து செல்லலாம் என்றும் அறிவித்தது. 

    கீழடி7 ம் கட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பி.எஸ்சி. 2-ம்ஆண்டு வேளாண் படிக்கும் 100 மேற்பட்ட மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
    இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், நாங்கள் கல்விச் சுற்றுலாவாக மதுரை வந்தோம். கீழடி அருகே இருப்பதாக அறிந்தோம். உடனே ஆசிரியருடன் இங்கே வந்து பா ர்வையி ட்டோம். இது  மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

    நம் மு ன்னோர்கள் மிகவும் நாகரீகமாக வாழ்ந்து ள்ளார்கள். தொல்லியல் துறை ஆராய்ச்சி யாளர்கள் இதை பற்றி முழு விளக்கம் கொடுத்தனர்.
    இங்கு கண்டுபிடித்த பல பொருட்களை படமாக வைத்துள்ளார்கள். அதை பார்த்து வியந்தோம். எங்களைப்போல் அனைவரும் வந்து இந்த அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என்றனர். 

    Next Story
    ×